Published : 03 Sep 2014 10:52 AM
Last Updated : 03 Sep 2014 10:52 AM

தமிழகத்தில் மழை அளவு சராசரியை விட 7% அதிகம்

தமிழகத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இதுவரை சராசரியை விட 7% அதிகம் பெய்துள்ளது.

கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 27 வரை பதிவான மழை நிலவரப்படி தமிழகத்தில் 203.9 மி.மீ மழை பெய்துள்ளது. இது தமிழகத்தில் இந்த பருவ காலத்தில் பெய்யும் சராசரி மழை அளவை விட 7% அதிகமாகும். அதே போன்று புதுவையில் 256 மி.மீ மழை பெய்துள்ளது. இது சராசரியை விட 14% அதிகமாகும்.

அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் இதுவரை 382% மழை சராசரியை விட அதிகமாக பெய்துள்ளது. மேலும், விழுப்புரம், திருவாரூர், திருப்பூர், தேனீ, பெரம்பலூர், ஈரோடு, சென்னை ஆகிய மாவட்டங்களில் சராசரியை விட அதிக மழை பெய்துள்ளது.

செப்டம்பர் மாதம் இந்த பருவ மழைக்காலம் முடியும் போது, தமிழகத்தில் சராசரியான மழையே பெய்திருக்கும் என்று தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம்,

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரத்தில் மழை பெய்யும் என்றும் கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x