Last Updated : 01 Jun, 2019 11:26 AM

 

Published : 01 Jun 2019 11:26 AM
Last Updated : 01 Jun 2019 11:26 AM

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 3-ம் தேதி கூடுகிறது

புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் கடந்த மார்ச் 2-ம் தேதி கூட்டப்பட்டு, அன்றைய தினம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் வரும் ஜூன் 3-ம் தேதி கூடுகிறது.

இதனிடையே மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக வைத்திலிங்கம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்பி ஆகிவிட்டார். அந்த பொறுப்பு துணை சபாநாயகரான சிவகொழுந்துவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வைத்திலிங்கம் சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நின்று வென்ற நிலையில், புதிதாக சபாநாயகர் தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், வைத்திலிங்கம் வகித்து வந்த சபாநாயகர் பதவியை பிடிக்க காங்கிரஸ் எம்எல்ஏக்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் வரும் ஜூன் 3-ம் தேதி கூடும் எனவும், அதே நாளில் புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் சட்டப்பேரவை செயலாளர் வின்சென்ட் ராயர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் "புதுச்சேரி சட்டப்பேரவை ஜூன் 3-ம் தேதி காலை 9.30 மணிக்கு கூட்டப்படுகிறது. அதே நாளை பேரவைத் தலைவர் தேர்தல் நடத்தும் தேதியாக துணைநிலை ஆளுநர் நிர்ணயித்துள்ளார். நியமனச் சீட்டுகளை அளிப்பதற்கான அறிவிப்பு ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் தனித்தனியாக அனுப்பப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x