Published : 29 Jan 2014 04:53 PM
Last Updated : 29 Jan 2014 04:53 PM

திமுக நாடகத்தை நம்ப மாட்டோம்: பிரேமலதா

“வீட்டுக்குள் பேசவேண்டிய விஷயத்தை ஊடகங்கள் முன் கருணாநிதியும் அழகிரியும் பேசுகின்றனர். திமுக-வின் கபட நாடகத்தை நம்பத் தயாராக இல்லை” என்று மனைவி பிரேமலதா விஜய்காந்த் தெரிவித்துள்ளார்.

உளுந்தூர்பேட்டையை அடுத்த எறஞ்சியில் வரும் 2-ம் தேதி தேமுதிக மாநில மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை மாநாட்டுக்கான அனுமதியைக் காவல்துறையினர் வழங்காத நிலையில், புதன்கிழமை மாநாட்டுப் பணிகளை பார்வையிட்ட பிரேமலதா நம்மிடம் பேசியதாவது:

தேமுதிக மாநாட்டுக்கு அனுமதி கேட்டு முறைப்படி மனு கொடுத்தோம். இதுவரை அனுமதி இல்லை. சட்டத்தையும் நீதியையும் மதித்து உரிமையைக் கேட்போம்.முறையோடு அனுமதி பெற்றுதான் மாநாட்டை நடத்துவோம்.

2016 ம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றிபெற்று தேமுதிக ஆட்சி அமைக்கும். தொண்டர்களின் கருத்துக்களைக் கேட்டு கூட்டணி குறித்து மாநாட்டில் முடிவு அறிவிக்கப்படும்.எந்தத் தலைவரும் தொண்டர்களைக் கேட்டு முடிவெடுக்கப்படும் என சொல்லவில்லை. ஆனால் விஜயகாந்த் கூறியுள்ளார்.

டெல்லி மேல் சபையில் ஒரு இடத்துக்கு தேமுதிக போட்டியிடுவதால் தமிழகத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. எனவேதான் நாங்கள் வேட்பாளரை நிறுத்தவில்லை. வீட்டுக்குள் பேசவேண்டிய விஷயத்தை ஊடகங்கள் முன் கருணாநிதியும் அழகிரியும் பேசுகின்றனர். திமுக-வின் கபட நாடகத்தை தேமுதிக நம்பத் தயாராக இல்லை. சட்டசபை நாளை கூடுகிறது. எதிர்க்கட்சி துணைத்தலைவர் யார் என்பதை விஜயகாந்த் அறிவிப்பார் என்றார் பிரேமலதா.

2016 -ம் ஆண்டு வெற்றிபெற்று செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஆட்சி அமைப்போம் என்கிறீர் களே என்ற கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா, “அங்குதான் மருத்துவ மனை என அறிவித்துவிட்டார்கள். யூகத்தின் அடிப்படையில் பதி லளிக்கமுடியாது. உங்களின் எல்லா கேள்விகளுக்கும் விஜயகாந்த் மாநாட்டில் பதிலளிப்பார்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x