Published : 30 Mar 2018 05:14 PM
Last Updated : 30 Mar 2018 05:14 PM
திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் யாரேனும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்தார்.
மும்பையில் நடைபெற உள்ள சினிமா நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்காக கமல்ஹாசன் இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது, செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு கமல்ஹாசன் பதிலளித்துப் பேசியதாவது,
“தமிழகத்தில் இன்று காவிரிக்காக போராட வேண்டிய நிலை வந்திருக்கிறது. காவிரி விவகாரத்தில் அரசியல் ரீதியான அழுத்தத்தை மத்திய அரசுக்கு தமிழக அரசு அளிக்க வேண்டும். தமிழக அரசு தரும் அழுத்தம் எப்படி இருந்தாலும் அது பாராட்டுக்குரியதுதான்.
காவிரி மேலாண்மை வாரியத்துக்காக தமிழக அரசு தியாகம் செய்ய வேண்டும். காவிரி விவகாரத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பாக போராட்டம் தேவைப்பட்டால் கண்டிப்பாக அறிவிக்கப்படும்.
திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் யாரேனும் பங்கேற்க வாய்ப்புண்டு” என கமல்ஹாசன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT