Published : 16 Mar 2018 08:10 AM
Last Updated : 16 Mar 2018 08:10 AM

விலையில்லா கால்நடைகளுக்கு ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு

விலையில்லா கறவைப் பசுக்கள், வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி, 2018-19-ம் ஆண்டில் 12 ஆயிரம் கறவைப் பசுக்களும் 1 லட்சத்து 50 ஆயிரம் பயனாளிகளுக்கு 6 லட்சம் வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்துக்காக ரூ.248 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, கோழிப் பண்ணை வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.50 கோடியும், தீவன உற்பத்தி திட்டத்துக்கு ரூ.25 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 100 கால்நடை கிளை நிலையங்கள் கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்படும். இதுதவிர, ராணிப்பேட்டையில் உள்ள கால்நடை நோய் தடுப்பு மருந்து நிறுவனத்தின் கட்டமைப்பு ரூ.10 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.

பால்வளத் துறையின் மேம்பாட்டுக்காக நபார்டு வங்கியிடம் இருந்து ரூ.500 கோடி கடன் பெறப்பட்டு பால் பதப்படுத்துவதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். 2018-19-ம் ஆண்டு பட்ஜெட்டில் கால்நடை பராமரிப்பு துறைக்கு ரூ.1,227 கோடியும் பால்வளத் துறைக்கு ரூ.130 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x