Published : 15 Mar 2018 09:22 AM
Last Updated : 15 Mar 2018 09:22 AM

போலீஸிடம் இருந்து தப்பிக்க 3-வது மாடியில் இருந்து குதித்த ரவுடி பலி

திருவொற்றியூரில் போலீஸிடம் இருந்து தப்பிக்க 3-வது மாடியில் இருந்து குதித்த ரவுடி தரையில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை காசிமேட்டைச் சேர்ந்தவர்கள் மோகன்ராஜ், ராசய்யா, ஜோதிபாசு. ரவுடிகளான 3 பேரும் மண்ணடி ரவுடி விஜயகுமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இந்நிலையில் அண்ணாமலை என்பரை கொலை செய்ய 3 பேரும் மீண்டும் திட்டம் தீட்டியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

மரத்தில் தாவி தப்பிக்க முயற்சி

அதைத் தொடர்ந்து 3 பேரையும் போலீஸார் தேடியபோது திருவொற்றியூரில் ஒரு வீட்டின் 3 மாடியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. நேற்று இரவில் அந்த வீட்டை போலீஸார் சுற்றி வளைத்து 3 பேரையும் பிடிக்க முயன்றனர். அப்போது 3 பேரும் மாடியில் இருந்து ஒரு மரத்தின் மீது தாவி அங்கிருந்து தப்பிக்க முயன்றனர்.

இதில் ஜோதிபாசு மட்டும் மரம் வழியாக இறங்கி தப்பிச் செல்ல, மோகன்ராஜ், ராசய்யா இருவரும் 3-வது மாடியில் இருந்து கீழே விழுந்து விட்டனர். இருவரையும் போலீஸார் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிறிது நேரத்தில் மோகன்ராஜ் பரிதாபமாக இறந்து விட்டார். படுகாயம் அடைந்த ஜோதிபாசுவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x