Published : 03 Mar 2018 04:12 PM
Last Updated : 03 Mar 2018 04:12 PM
சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டு வருவதைக் கண்டித்து லட்சம் பேர் பங்கேற்கும் போராட்டம் நடத்த கோவையில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தமிழகத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள சிறுவாணி ஆற்றுநீரைத் தடுக்கும் வகையில் கேரளாவில் அணை கட்டப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து போராடுவது என அனைத்துக் கட்சிகளும் கூடி முடிவெக்கப்பட்டது.
இதுதொடர்பாக அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் வரும், மார்ச் 7 -ல் அணை அமைக்கப்பட்டுள்ள சோலையூர் பகுதியை பார்வையிடவும் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சிறுவாணி நீரைத் தடுத்து நிறுத்தும் வகையில் அணை கட்டப்பட்டுவருவதை எதிர்த்து மாநகரத்தில் 1 லட்சம் பங்கேற்கும் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் திமுக எம்.எல்.ஏ. என்.கார்த்திக், காங்கிரஸ் தலைவர்கள் மயூர ஜெயக்குமார், மற்றும் வி.சி.மனோகரன், மதிமுக, தேமுதிக, ஆம் ஆத்மி உள்ளிட்ட 9 கட்சிகளின் பிரதிதிகள் கலந்துகொணடனர். இக்கூட்டத்தில் அரசியல் சாராத விவசாய சங்கத்தினரும் பங்கேற்றனர்.
இக்கூட்டம், திமுக மாவட்ட தலைமையகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கே.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT