Published : 13 Mar 2018 09:32 AM
Last Updated : 13 Mar 2018 09:32 AM

வனத்துறை அனுமதியுடன்தான் மலையேறும் பயிற்சியில் ஈடுபட வேண்டும்: முதல்வர் கே.பழனிசாமி அறிவுறுத்தல்

வனத்துறை அனுமதியுடன்தான் மலையேறும் பயிற்சியில் ஈடுபட வேண்டும் என முதல்வர் கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தேனி மாவட்டம் குரங்கணியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் தீ விபத்தில் சிக்கிய சம்பவம் வேதனை அளிக்கிறது. 36 பேர் மலையேறும் பயிற்சியில் ஈடுபட்ட நிலையில், 9 பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வனத்துறை அனுமதியின்றி மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், தீ விபத்தில் சிக்கியுள்ளனர்.

வனத்துறை அனுமதியின்றி காட்டுக்குள் யாரும் செல்லக் கூடாது என சட்டம் உள்ளது. வனத்துறை அனுமதியின்றி காட்டுக்குள் இனி யாராவது சென்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கோடை காலத்தில் வனப்பகுதிகளில் தீ பரவி கொளுந்துவிட்டு எரியும். எனவே, அதற்கான பாதுகாப்பு உபகரணங்கள், போதுமான பயிற்சி, முன்னெச்சரிக்கை நடவடிக்கை அடிப்படையில் வனத்துறை அனுமதியுடனே மலையேறும் பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

வனத்துறையின் ஆலோசனை மற்றும் அனுமதியுடன் காட்டுக்குள் செல்ல வேண்டும். தீக்காயம் அடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை அரசு தரப்பில் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x