Published : 26 Mar 2018 09:12 AM
Last Updated : 26 Mar 2018 09:12 AM
வங்கிகளுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை என ‘வாட்ஸ்-அப்’பில் வரும் தகவல் தவறானவை. வரும் 31-ம் தேதி வங்கிகள் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் ஒன்றான ‘வாட்ஸ்-அப்’பில் வங்கி விடுமுறை குறித்து கடந்த 2 நாட்களாக ஒரு தகவல் வைரலாகப் பரவி வருகிறது. அதில், வரும் 29-ம் தேதி வியாழக்கிழமை மகாவீர் ஜெயந்தி, 30-ம் தேதி வௌ்ளிக்கிழமை புனிதவெள்ளி, 31-ம் தேதி சனிக்கிழமை மற்றும் ஏப்.1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, ஏப்.2-ம் தேதி திங்கட்கிழமை ஆண்டு கணக்கு முடிப்பு தினம் என தொடர்ந்து 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது. எனவே, அதற்கேற்றவாறு தங்களுடைய வங்கிப் பணப் பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் தவறானவை என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறும்போது, வரும் 29, 30-ம் தேதிகளில் மகாவீர் ஜெயந்தி மற்றும் புனிதவௌ்ளியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆனால், 31-ம் தேதி சனிக்கிழமையன்று வங்கிகள் முழு நாள் செயல்படும். அன்றைய தினம் வழக்கம் போல் வாடிக்கையாளர்கள் பணப் பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து வங்கி சேவைகளையும் மேற்கொள்ளலாம்.
ஏப்.1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை நாள். ஏப்.2-ம் தேதி வங்கிகளின் ஆண்டு கணக்கு முடிக்கும் தினம். எனவே அன்றைய தினம் வங்கிகள் செயல்படும். ஆனால், அன்று பணப் பரிவர்த்தனைகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை ஏதும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT