Published : 24 Mar 2018 04:34 PM
Last Updated : 24 Mar 2018 04:34 PM
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓராண்டு ஆட்சியை நிறைவு செய்ததே சாதனைதான் என, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய சீமான், “கர்நாடகாவில் நடைபெற உள்ள தேர்தலை மனதில் வைத்து பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு தேசிய கட்சிகளும் காவிரி விவகாரத்தில் அமைதியாக இருக்கின்றன. பாஜக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காது.
காவிரி மேலாண்மை வாரியம் தமிழர்களுக்கு உயிர், பாஜகவிற்கு அது அரசியல். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிவுக்கு வருவதால், பாஜகவினர் மாற்றி மாற்றிக் கருத்து கூறுகின்றனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஓராண்டு ஆட்சி நடத்தியதே சாதனைதான். அதை நாம் பாராட்டத்தான் வேண்டும்” என்று சீமான் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT