Last Updated : 10 Mar, 2018 04:53 PM

 

Published : 10 Mar 2018 04:53 PM
Last Updated : 10 Mar 2018 04:53 PM

“அறிவும் இதயமும் இல்லாத அசுரன்” – காயத்ரி ரகுராம்

‘அறிவும் இதயமும் இல்லாத அசுரன்’ என அழகேசனை ட்விட்டரில் விமர்சித்துள்ளார் காயத்ரி ரகுராம்.

சென்னை, கே.கே. நகரில் உள்ள தனியார் கல்லூரி வாசலில், தன்னுடைய முன்னாள் காதலன் அழகேசனால் நேற்று குத்திக் கொல்லப்பட்டார் மாணவி அஸ்வினி. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்களும், அனுதாபங்களும் எழுந்துள்ளன.

இந்நிலையில், நடன இயக்குநரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் ட்விட்டரில் தன்னுடைய கருத்தைப் பதிவு செய்துள்ளார். “காதல் மிரட்டல் என்ற பெயரில் இளம்பெண் அஸ்வினியை அறிவும் இதயமும் இல்லாத அசுரன் கொலை செய்துள்ளான். அஸ்வினி குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x