Published : 15 Sep 2014 11:21 AM
Last Updated : 15 Sep 2014 11:21 AM
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம்போலீஸ் லைன் தெருவைச் சேர்ந்த வர் ராமசாமி. இவரது மகன் சண்முகம் (37). வழக்கறிஞராக இருந்தார். திருமணமான இவருக்கு சங்கராபுரம் அருகே ஊராங்கண்ணியைச் சேர்ந்த தண்டபாணியின் மனைவி கோமதி ராணி என்பவருடன் கூடா நட்பு இருந்துள்ளது.
இந்த நிலையில் சனிக்கிழமை மாலை சண்முகம் பிரதிவிமங்கலம் ஏரிக்கரை ரோட் டில் சென்றபோது பின்தொடர்ந்து வந்த 3 பேர் கும்பல் அவர் மீது மிளகாய் பொடி தூவி சரமாரியாக வெட்டி கொலை செய்தது. தியாகதுருகம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கோமதிராணியின் கணவர் தண்டபாணி கொலை வழக்கிலும், சங்கராபுரம் முன்னாள் பேரூராட்சித் தலைவர் முனுசாமி கொலை வழக்கிலும், பிரம்மகுண்டம் கிராமத்தைச் சேர்ந்த கணேசன் கொலை வழக்கிலும் தொடர்புடைய வழக்கறிஞர் சண்முகத்தை இக்கொலைகளால் பாதிக்கப்பட்டவர்கள் பழிக்கு பழியாக கொன்றிருக்கக் கூடும் என்ற கோணத்திலும், வழக்கறிஞர் சண்முகம் கொல்லப்பட்ட இடத்தில் பொது மக்களோடு இணைந்து இருந்த கோமதி ராணிக்கும் இக்கொலை யில் தொடர்பு இருக்கலாமோ என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சண்முகம் கொலை தொடர்பாக அவரின் தந்தை ராமசாமி தியாகதுருகம் போலீஸில் கொடுத்த புகாரில் சங்கரா புரத்தைச் சேர்ந்த சேகர், குணா, கடத்தூர் சேகர், பப்லு, பன்னீர், ரவி, பழனி, சண்முகம், மற்றும் கோமதிராணி ஆகியோர் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் சண்முகம் கொல்லப்படுவதற்கு முன்பு கள்ளக்குறிச்சியில் மது அருந்தியுள்ளார். அப்போது சங்கராபுரம் மனோகரன், கள்ளக்குறிச்சி கனகராஜ் ஆகியோருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே அவர்களை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT