Published : 19 Mar 2018 08:08 AM
Last Updated : 19 Mar 2018 08:08 AM
டிடிவி.தினகரன் புதிய கட்சி தொடங்கியதன் பின்னணியில் சதி இருப்பதாக லட்சிய திமுக நிறுவனர் தலைவர் டி.ராஜேந்தர் தெரிவித்தார்.
திருச்சியில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: வாக்குச்சீட்டு முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என காங்கிரஸ் கூறியிருப்பதை வரவேற்கிறேன். குறிப்பிட்ட காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி அனைவரும் போராட வேண்டும். தமிழகத்தில் நடைபெறுவது பாஜகவின் மாற்று அரசு. எதற்கும் விடை காணாத அரசு. அதிமுகதான் இப்படியென்றால், எதையும் தட்டிக் கேட்க இயலாமல் இருக்கிறது எதிர்க்கட்சி. கருணாநிதி செயல்படும் நிலையில் இருந்தால், இப்படி நடக்குமா? அவரது திமுக வேறு. ஸ்டாலினின் திமுக வேறு.
தினகரன் அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்றால், ஏன் வேறு பெயரில் கட்சி தொடங்க வேண்டும். இதன் பின்னணியில் சதி இருக்கிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT