Published : 12 Mar 2018 09:13 AM
Last Updated : 12 Mar 2018 09:13 AM
வனப்பகுதிக்குள் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற மாணவர்கள் அதற்கான முறையான அனுமதியை பெறாததால், பெரிய விபத்தில் சிக்கியதாக தெரியவந்துள்ளது.
பொதுவாக வனப் பகுதிக்குள் செல்வதென்றால், அரசு அல்லது வனத்துறையினரின் அனுமதி பெறாமல் பொதுமக்கள் செல்ல முடியாது. வனப்பகுதிக்கு செல்வதாக இருந்தாலோ அல்லது அங்கு தங்கி மலையேறும் பயிற்சி செய்வதாக இருந்தாலோ எத்தனை நாட்கள் மலையேறும் பயிற்சி பெறுவது, எத்தனை பேர் கலந்து கொள்கிறார்கள் உட்பட பல்வேறு தகவல்களை மாவட்ட வன அலுவலரிடம் தெரிவித்து அவரது அனுமதியைப் பெற வேண்டும். அதன் பிறகு மலைவாழ் மக்கள் அல்லது வன ஊழியரின் வழிகாட்டுதலுடன் மலையேறச் செல்ல வேண்டும் என்பதுதான் விதி.
ஆனால் குரங்கிணி மலைப்பகுதியில் மலையேற்றத்துக்குச் சென்ற மாணவ, மாணவிகள் எந்தவித அனுமதியும் பெறாமல் சென்றுள்ளனர். இதனால் இவர்கள் இத்தகைய பெரிய விபத்தில் சிக்கியுள்ளனர். எனவே மீட்புப் பணியும் துரிதமாக மேற்கொள்ள முடியாமல் போனது. இவர்கள் முறையான அனுமதி பெறாமல் வெறும் டோக்கன் மட்டுமே பெற்றுச் சென்றதாக கூறப்படுகிறது. அதனால், மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களது இருப்பிடம் குறித்து குழப்பம் ஏற்பட்டுள்ளது. அவர்களை மீட்கும் பணியிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT