Published : 26 Mar 2018 09:31 AM
Last Updated : 26 Mar 2018 09:31 AM

ஜெர்மனி அதிபர் சென்னை வருகை

ஜெர்மனி அதிபர் பிராங் வால்டர் ஸ்டைன்மெயர் நேற்று சென்னை வந்தார்.

ஜெர்மனி அதிபர் பிராங் வால்டர் ஸ்டைன்மயர் 5 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்துப் பேசிய அவர், நேற்று விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரையும் அவரது மனைவி எல்கே புடன் பென்டரையும் தமிழக அரசின் சார்பில் மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயகுமார் சால்வை அணிவித்தும் பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றார். ஜெர்மனி அதிபருடன் இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் மார்ட்டின் என்.ஜெர்மன், ஜெர்மனி நாட்டுக்கான இந்திய தூதர் முக்தா தத்தா டோமர் உள்ளிட்டோரும் சென்னைக்கு வந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x