Published : 07 Mar 2018 09:12 AM
Last Updated : 07 Mar 2018 09:12 AM

புது கட்சி தொடங்க தேவையில்லை: புகழேந்தி கருத்து

புதிய கட்சி ஆரம்பிப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. எனக்கு அதில் விருப்பமில்லை என்று டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்தார்.

புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில், தமிழகத்தைச் சேர்ந்த யாரையும் பிரதமர் சந்திக்க மாட்டார். எனவே முதல்வர் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியது ஒரு நாடகம். அது எந்தவிதத்திலும் தமிழக மக்களுக்கு பயன் தராது.

டிடிவி தினகரன் புதிய கட்சி ஆரம்பிப்பதில் எனக்கு விருப்பம் இல்லை. புதிய கட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை. புது கட்சி தேவையில்லை என்பதே என்னுடைய கருத்து. டிடிவி தினகரன், உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வதற்காக புதிய கட்சி ஆரம்பிக்க திட்டமிட்டு இருக்கலாம்.

அரசியல் களத்தில் யார் முந்துவது என்று ரஜினிக்கும், கமலுக்கும் இடையே போட்டி உள்ளது.

அவர்கள் அரசியல் களத்தில் நீடிக்க மாட்டார்கள். எனவே அவர்கள் எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. தற்போது கூட 64 எம்எல்ஏக்கள் எங்களிடம் வர தயாராக இருக்கின்றனர். இவ்வாறு புகழேந்தி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x