Published : 12 Mar 2018 09:13 AM
Last Updated : 12 Mar 2018 09:13 AM

காட்டுத் தீயில் சிக்கிய சென்னை ஐடி ஊழியர்கள்

கொழுக்கு மலையில் காட்டுத் தீயில் சென்னையைச் சேர்ந்த பெண் ஐடி ஊழியர்களும் சிக்கி இருப்பதாக தெரியவந்தது.

சென்னையைச் சேர்ந்த பூஜா, மினார் ஜார்ஜ், நிஷா, திவ்யா, நிவேதா, சிரதா ஸ்ரீராமன், அனு வித்யா, ஹேமலதா, புனிதா, சாய் வசுமதி, சுபா, தேவி, இலக்கியா சந்திரன், சுகானா, அகிலா, ஸ்வேதா, ஜெயஸ்ரீ, லேகா, நிவ்யா பிரக்குருதி, அருண், விபின் ஆகியோர் நேற்று முன்தினம் கொழுக்கு மலைக்கு மலையேற்ற பயிற்சிக்கு சென்றனர். இவர்கள் நேற்று மாலை அடிவாரத்துக்கு வந்திருக்க வேண்டும். நேற்று இரவு வரை இவர்கள் இறங்கவில்லை. இவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வந்தது. இவர்களில் பெரும்பாலானோர் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிபவர்கள் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x