Published : 29 Sep 2014 10:47 AM
Last Updated : 29 Sep 2014 10:47 AM

கோயம்பேட்டில் ரூ.2 கோடி காய்கறிகள் அழுகின

அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பால் சென்னையில் சரக்கு போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்திருந்த காய்கறிகள் அழுகத் தொடங்கியுள்ளன.

இது குறித்து கோயம்பேடு காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க ஆலோசகர் சவுந்தரராஜன் கூறியதாவது:

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பால் தமிழகத்தில் சரக்கு போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் வெளி மாநிலங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்பட்ட பீன்ஸ், தக்காளி உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளை வெளியூர்களுக்கு கொண்டுசெல்ல முடியவில்லை. மேலும் சிறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களும் காய்கறிகளை வாங்கிச் செல்வது வழக்கத்தை விட மிகக் குறைவாக உள்ளது. மார்க்கெட்டில் உள்ள காய்கறிகள் விற்பனையாகாததால் அழுகத் தொடங்கியுள்ளன. இதனால் வியாபாரிகளுக்கு ரூ.2 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x