Published : 30 Mar 2018 02:31 PM
Last Updated : 30 Mar 2018 02:31 PM

காவிரி விவகாரத்தில் தமிழகம் முழுவதும் ஏப்ரல் 2-ம் தேதி உண்ணாவிரதப் போரட்டம்: முதல்வர் பழனிசாமி

 காவிரி விவகாரத்தில் தமிழர்களின் உணர்வினை பிரதிபலிக்கும் வகையில் அதிமுக சார்பில் ஏப்ரல் 2-ம் தேதி உண்ணாவிரதப் போரட்டம் தமிழகம் முழுவதும் நடைபெறும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மதுரையில் அதிமுக சார்பாக 120 ஜோடிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் பழனிசாமி பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

அப்போது, “உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் தந்தனர். அவை தொடங்கியதிலிருந்தே 17 நாட்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக உறுப்பினர்கள் அவையை முடக்கினர். அதனால், காவிரி விவகாரத்தில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரவில்லை என்பது பொய்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காததால், தமிழர்களின் உணர்வினை பிரதிபலிக்கும் வகையில் ஏப்ரல் 2-ம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.

மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்வது குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறோம்” என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x