Published : 04 Mar 2018 09:44 AM
Last Updated : 04 Mar 2018 09:44 AM

ஆந்திராவில் இருந்து 84 தமிழர்கள் ஊர் திரும்பினர்

ஆந்திர மாநிலம் திருப் பதி வனப் பகுதியில் செம்மரம் வெட்டச் சென்றதாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 84 பேர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர். இவர்களில் சிலர் கல்லூரி மாணவர்கள் என்பது தெரியவந்தது.

பின்னர், அனைவரையும் விடுவிக்க ஆந்திர அதிகாரிகள் முடிவு செய்தனர். “இனி செம்மரம் வெட்ட ஆந்திர வனப் பகுதிக்கு வரமாட்டோம்” என்று அவர்களிடம் எழுதி வாங்கினர். பின்னர், அவர்களை அங்கிருந்து அனுப்புவது குறித்து வேலூர், திருவண்ணாமலை ஆட்சியர்களிடம் பேசினர். 2 மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் தலா 2 பேருந்துகள் திருப்பதிக்கு அனுப்பப்பட்டன. அவற்றில் 84 பேரும் நேற்று ஊர் திரும்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x