Published : 06 Mar 2018 09:33 AM
Last Updated : 06 Mar 2018 09:33 AM
ஜெயலலிதா மரணம் தொடர் பான விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜெயா டிவி மேலாண் இயக்குநர் விவேக்குக்கு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த தமிழக அரசு சார்பில் நீதிபதி அ.ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இது சேப்பாக்கத்தில் உள்ள கல்சா மகாலில் இயங்கி வருகிறது. ஏற்கெனவே முன் னாள் தலைமைச் செயலர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், ராம மோகனராவ், முன்னாள் டிஜிபி ராமானுஜம், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, ஜெ.தீபக், டாக்டர் பாலாஜி உள்ளிட்ட முக்கிய நபர்களிடம் விசாரணை நடத்தி சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதா மர ணம் தொடர்பாக தனக்குத் தெரிந்த தகவல்களைத் தெரிவிக்குமாறு சசிகலாவுக்கும் சம் மன் அனுப்பப்பட்டு இருந்தது.
அதன் தொடர்ச்சியாக ஜெயா டிவி மேலாண் இயக்குநர் விவேக் கடந்த மாதம் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இந்நிலையில், அவர் மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் சிலருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, இன்று பிற்பகல் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கண்ணன், 7-ம் தேதி ஜெயலலிதாவின் சமையல்காரர் சேகர், 8-ம் தேதி மற்றொரு கார் ஓட்டுநர் ஐயப்பன், 9-ம் தேதி விவேக் ஆகி யோர் ஆஜராகி சாட்சியம் அளிக்க உள்ளனர்.
மருத்துவர் குழு
ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக அப்போலோ மருத்துவமனை அளித்த ஆவணங்களை ஆய்வு செய்ய, மருத்துவர் குழு அமைக்க வேண்டும் என்று விசாரணை ஆணையம் அரசிடம் கேட்டுள்ளது. சில தினங்களில் மருத்துவர் குழுவை அரசு அறிவிக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படு கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT