Published : 27 Sep 2014 02:10 PM
Last Updated : 27 Sep 2014 02:10 PM
ஜெயலலிதாவுக்கு ஜெயில் என்றால் ஜெஜெ என்று பொருள் என சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதையொட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவு செய்து வரும் பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, தற்போது ஜெ.ஜெ என்ற எழுத்துக்களுக்கு புது விளக்கத்தினை அளித்துள்ளார்.
கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395.59 சொத்து குவித்ததாக அப்போதைய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த 14-6-1996 அன்று சென்னை மாநகர அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கின் தீர்ப்பு 3 மணி அளவில் எதிர்பார்க்கப்படும் நிலையில் சுப்பிரமணியன் சுவாமியின் ட்வீட், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT