Published : 09 Mar 2018 01:34 PM
Last Updated : 09 Mar 2018 01:34 PM

காவிரி மேலாண்மை வாரியம் ஒன்றே குறிக்கோள்: ஸ்டாலின் வலியுறுத்தல்

இன்று மத்திய அரசின் சார்பில் கூட்டப்படும் காவிரி மேலாண்மை வாரியம் கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்றே குறிக்கோள், வேறு சமரசம் எதுவும் கூடாது என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு:

''டெல்லியில், இன்று நடைபெறும் காவிரி தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் தமிழக அரசின் குழு, கடந்த பிப்ரவரி 22 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டவாறு, காவிரி மேலாண்மை வாரியத்தை ஆறு வாரங்களுக்குள் அமைப்பதை வலியுறுத்தும் வகையிலான அணுகுமுறையை மட்டும் மேற்கொள்ள வேண்டும்.

வேறு எவ்வித இடைக்கால ஏற்பாடு எதிலும், அனைத்துக் கட்சிகள் - விவசாய சங்கங்களின் ஒப்புதலின்றி, சமாதானம் செய்து கொள்ள முயற்சிக்கக்கூடாது என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.''

இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x