Published : 04 Mar 2018 10:45 AM
Last Updated : 04 Mar 2018 10:45 AM
‘எம்எல்ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக பொய் பிரச்சாரம் செய்துவரும் தினகரன், இதனை நிறுத்திக் கொள்ளவில்லை என்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என தமிழக மின்சாரத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மானிய விலையில் அம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தினகரன் தரப்பு தங்களுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது எனவும் சட்டப்பேரவை உறுப்பினர் ஆதரவு இருக்கிறது எனவும் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். பின், எதற்கு ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரையும் நேரடியாக, மறைமுகமாக சந்தித்து பேசுகின்றனர்.
தேவையில்லாமல் சட்டப்பேரவை உறுப்பினர்களின் தனி மனித உரிமையை பறிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் தவறான தகவலை பரப்பி வருகின்றனர். நேரடியாக மக்களைச் சந்திக்காமல் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிப்பதற்காக ஒவ்வொரு உறுப்பினர்களையும் தேவையில்லாமல் அழைத்துக் கொண்டிருக்கிறார். இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதோடு தனி மனித உரிமையை பாதிக்கின்ற காரணத்தால் சட்ட நிபுணர்களோடு கலந்து ஆலோசித்து அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT