Published : 06 Mar 2018 10:30 AM
Last Updated : 06 Mar 2018 10:30 AM
மதுரை ஆதீன மடத்திற்கு வரவேண்டிய நேரத்தில் இளைய ஆதீனம் வருவார் என ஆதீனம் கூறினார்.
மதுரை ஆதீனத்திற்கு இளைய ஆதீனமாக சில ஆண்டுகளுக்கு முன்பு நித்யானந்தா நியமிக்கப்பட்டார். பல்வேறு பிரச்சினைகளால் அவர் மடத்தைவிட்டு வெளியேற்றப்பட்டார்.
இதையடுத்து அவர் மடத்திற்குள் நுழைய அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், மதுரை ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா நுழைய தடை விதித்து நேற்று உத்தரவிட்டது.
இந்நிலையில் மதுரை ஆதீனம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நித்யானந்தா இனிமேல் மதுரை ஆதீன மடத்துக்குள் வரமுடியாது. அவரால் இனி எந்தப் பிரச்சினையும் வராது. எப்போதும் போல் மடத்தில் சிறப்பு குறையாமல் பூஜைகள் நடக்கின்றன.
இந்த மடத்திற்கு இளைய ஆதீனம் நியமனம் பற்றிய நிலை தற்போது எதுவும் எழுவில்லை. இந்த மடத்திற்கு நல்ல இளவரசர் வருவார். எங்கோ ஓரிடத்தில் அவர் இருக்கிறார். அவர் வரவேண்டிய நேரத்தில் கட்டாயம் வருவார் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT