Published : 28 Mar 2018 08:04 AM
Last Updated : 28 Mar 2018 08:04 AM

ரூ.2,500 கோடி வரி பாக்கி: காக்னிசென்ட் நிறுவனத்தின் வங்கி கணக்குகள் முடக்கம்

காக்னிசென்ட் நிறுவனத்தின் வங்கி கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கியுள்ளனர்.

சென்னையில் தரமணி, பள்ளிக்கரணை, மணப்பாக்கம் உட்பட பல இடங்களில் காக்னிசென்ட் மென்பொருள் நிறுவனம் உள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் வேலை செய்கின்றனர். இந்நிறுவனத்தில் சில நாட்களுக்கு முன்பு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, ஏராளமான ஆவணங்களை கைப்பற்றினர். ஆவணங்களை ஆய்வு செய்தபோது சுமார் ரூ.2,500 கோடிக்கு ஈவுத்தொகை விநியோக வரி செலுத்தாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து காக்னிசென்ட் நிறுவனத்துக்கு வருமான வரித்துறை சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் காக்னிசென்ட் நிறுவனத்துக்கு சொந்தமான சென்னை, மும்பையில் உள்ள வங்கி கணக்குகளை வருமான வரித்துறையினர் முடக்கி வைத்துள்ளனர். மேலும், வங்கியில் உள்ள வைப்பு நிதியையும் அதிகாரிகள் முடக்கி வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x