Published : 23 Mar 2018 11:12 AM
Last Updated : 23 Mar 2018 11:12 AM
தேனி மாவட்டம் குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கிய மேலும் 2 பேர் உயிரிழந்ததால், அந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகே, குரங்கணி மலைப்பகுதியில் கடந்த மார்ச் 11-ம் தேதி காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த விபத்தில், அங்கு மலையேற்றத்திற்காகவும், சுற்றுலாக்காகவும் சென்றிருந்த பொதுமக்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் 10 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 27 பேர் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களில் 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால், காட்டுத்தீயில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்தது.
இந்நிலையில், குரங்கணி காட்டுத்தீயில் படுகாயமடைந்து மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தஞ்சையை சேர்ந்த சாய் வசுமதி இன்று (வெள்ளிக்கிழமை) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அதேபோல், காட்டுத்தீயில் சிக்கிய சென்னையை சேர்ந்த நிவ்ய நிக்ருதி என்பவரும், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதனால், குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT