Published : 24 Mar 2018 09:51 AM
Last Updated : 24 Mar 2018 09:51 AM
நாட்டில் விஞ்ஞானிகளின் தேவை அதிகரித்துள்ளது என்று இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவன் கூறினார்.
சென்னை குரோம்பேட்டை யில் உள்ள எம்ஐடி கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்க விழா மற்றும் நிறுவனர் தின விழா நேற்று நடந்தது. அமெரிக்க தூதரகத்தின் மூத்த அதிகாரி ராபர்ட் ஜி.பர்ஜெஸ் தலைமை தாங்கினார். இதில் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே.சிவன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது:
நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்காகவே விண்ணில் ராக்கெட்கள் செலுத்தப்படுகின்றன. கடந்த 60 ஆண்டுகளில் அதிநவீன தொழில்நுட்பங்களை நாம் சொந்தமாக உருவாக்கி இருக்கிறோம். இஸ்ரோ மூலம், இதுவரை 45 செயற்கைக் கோள்கள் விண்ணில் உள்ளன. இவை தொலை தொடர்பு, வானிலை, பேரிடர் எச்சரிக்கை உள்ளிட்ட பல துறைகளில், மக்களுக்கு சேவை செய்து வருகின்றன.
இஸ்ரோ மூலம் செயற்கைக் கோள்களைத் தயாரித்து வெளியில் வழங்க உள்ளோம். இதனால், நிறைய வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இந்திய மக்கள்தொகையில் 80 சதவீதம் பேர் கிராமத்தில் இருக்கின்றனர். ஆனால், 20 சதவீத நகர்ப்புற மக்கள் மட்டுமே தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகின் றனர்.
கிராமப்புற மக்களிடமும் தக வல் தொழில்நுட்பத்தை கொண்டு செல்வதற்கான பணி கள் நடந்து வருகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தூர்தர்ஷன் முன்னாள் தலைமை பொறியாளர் பீமாராவ், எம்ஐடி முதல்வர் ஏ.ராஜதுரை, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன் மற்றும் பேராசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இஸ்ரோ தலைவர் சிவன் கூறும்போது, ‘‘இஸ்ரோ மூலம் தயாரிக்கப்படும் ‘சந்திரயான் 2’ விண்கலத்தில் அதிக பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டி உள்ளதால், ஏப்ரலுக்கு பதிலாக அக்டோபரில் விண்ணில் செலுத்தப்படும். மீனவர்களுக்கு பல வகையில் பயனுள்ளதாக இருக்கும் புதிய செயலி தயாராகி வருகிறது. இந்த செயலி வரும் ஏப்ரலில் மீனவர்களுக்கு வழங்கப்படும். ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஜிசாட் 6-ஏ செயற்கைக்கோள் வரும் 29-ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது. தற்போதைய சூழலில், அறிவியல் விஞ்ஞானிகளுக்கு அதிக தேவை உள்ளது. விஞ்ஞானிகளை உருவாக்க தற்போதுள்ள பாடத்திட்டமே போதும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT