Published : 04 Mar 2018 10:02 AM
Last Updated : 04 Mar 2018 10:02 AM

ஆன்லைன் குளறுபடிகள் சரியாகும் வரை நேரடியாக பத்திரப்பதிவு செய்யக்கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

ஆன்லைன் முறையில் குளறுபடிகள் இருப்பதால், அவை சரியாகும் வரை நேரடியாக பத்திரப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் எனக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக பத்திரப்பதிவுத் துறை தலைவர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த பூபதி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ‘‘தமிழகம் முழுவதும் ஆன்-லைன் முறையில் பத்திரப்பதிவு நடைமுறையில் உள்ளது. இதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக பட்டா இல்லாத நிலங்களை பத்திரப்பதிவு செய்ய முடியவில்லை. மேலும் வருமான வரிக்கணக்கு எண்ணை பதிவு செய்வதற்கும் தனியாக பத்தி இல்லை. எனவே இந்த ஆன்-லைன் குளறுபடிகள் முழுமையாக சரியாகும் வரை முன்புபோலவே நேரடியாக பத்திரப்பதிவு செய்ய அனுமதித்து உத்தரவிட வேண்டும்’’ என்று கோரப்பட்டிருந்தது.

பதிலளிக்க உத்தரவு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், இது தொடர்பாக தமிழக பத்திரப்பதிவுத் துறைத் தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் மார்ச் 12-ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x