Published : 27 Mar 2018 11:26 AM
Last Updated : 27 Mar 2018 11:26 AM

தேர்வுப்பணி, விடைத்தாள் மதிப்பீட்டுக்கு உழைப்பூதியம் தொடர்பாக திருத்தப்பட்ட அரசாணை

தேர்வுப்பணி மற்றும் விடைத் தாள் மதிப்பீட்டு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக் கான புதிய உழைப்பூதியம், மதிப்பூதியம் தொடர்பான திருத்தப்பட்ட அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில் (எண் 51, நாள் 21.3.2018) கூறியிருப்பதாவது:

அரசு தேர்வுத்துறையால் நடத்தப்படும் பிளஸ் 2, பிளஸ் 1, எஸ்எஸ்எல்சி, இஎஸ்எல்சி மற்றும் இடைநிலை ஆசிரியர் பயிற்சி தேர்வு பணி மற்றும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான உழைப்பூதியம், மதிப்பூதியம் உயர்த்தப்பட்டது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணைக்குப் பதில் திருத்தப்பட்ட புதிய அரசாணையின்படி உழைப்பூதியத்தையும் மதிப்பூதியத்தையும் உயர்த்தி வழங்க ஆணையிடப்படுகிறது.

இவ்வாறு அந்த அரசாணை யில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x