Published : 24 Mar 2018 12:34 PM
Last Updated : 24 Mar 2018 12:34 PM
அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் சி.ரெட்டிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து, அவருக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அப்பல்லோ மருத்துவமனை குழுமத் தலைவர் பிரதாப் சி.ரெட்டிக்கு (84) வெள்ளிக்கிழமை நள்ளிரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, சுய நினைவை இழந்து மயங்கிய அவரை அருகிலிருந்த உறவினர்கள் உடனடியாக ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர். பிரதாப் ரெட்டிக்கு சிறியளவில் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக்கருதிய மருத்துவர்கள், அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி ஸ்டென்ட் சிகிச்சை அளித்தனர்.
இதையடுத்து, அன்றிரவே தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரதாப் ரெட்டி தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT