Published : 01 Mar 2018 09:48 PM
Last Updated : 01 Mar 2018 09:48 PM
இலங்கை அருகே நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், ''இந்தியப் பெருங்கடல் மற்றும் தெற்கு இலங்கை அருகே நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுநிலை, அதே இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது. அதன் காரணமாக தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதர தமிழக பகுதியில் வறண்ட வானிலை நிலவும்.
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்ப நிலையாக 33 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது'' என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT