Published : 05 Mar 2018 08:58 AM
Last Updated : 05 Mar 2018 08:58 AM
பல்லாவரம் அடுத்த பம்மலில் கல்லூரி மாணவியை கிண்டல் செய்ததில் ஏற்பட்ட தகராறில் கார் ஓட்டுநர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பல்லாவரம் அடுத்த பம்மல் பஞ்சாயத்து காலனி பூங்கா தெருவைச் சேர்ந்தவர் கோபி. கார் ஓட்டுநராக வேலை பார்த்து வந்தார். இவரது வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம ஆசாமிகள் பெட்ரோல் குண்டு வீசி ரகளையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
அதே பகுதியைச் சேர்ந்த எம்பிஏ படிக்கும் கல்லூரி மாணவியை நேற்று கோபி தனது நண்பர்களுடன் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதை அந்த மாணவி தட்டி கேட்டபோது அவரை தாக்கியதாக தெரிகிறது. இதில் மாணவிக்கு ஆதரவாக அதே பகுதியைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் கோபியை மிரட்டுவதற்காக அவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதும் தெரியவந்தது. சரத்குமார் மீது ஏடிஎம் கொள்ளை வழக்கு, வழிப்பறி வழக்குகள் சங்கர் நகர் போலீஸ் நிலையத்தில் உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி மாணவி அளித்த புகாரின்பேரில் சங்கர் நகர் போலீஸார் கோபியை கைது செய்தனர். பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக சரத்குமாரை போலீஸார் தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT