Published : 19 Sep 2014 11:10 AM
Last Updated : 19 Sep 2014 11:10 AM
பி.டி.செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளையின் தலைவராக உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையை தலைமையிட மாக கொண்டு செயல்பட்டு வரும் பி.டி.செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை, கடந்த பல ஆண்டுகளாக உயர் நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அறக்கட்டளையின் அறங்காவலர்களை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர் நீதிமன்றம் நியமித்து வருகிறது. தற்போதைய அறங்காவலர் குழுவின் பதவிக்காலம் முடிவடைவதால், புதிய குழு நியமிப்பது தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் என்.பால் வசந்தகுமார், கே.ரவிச்சந்திரபாபு ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளைக்கான அறங் காவலர்கள் குழு, கடந்த 2002-ம் ஆண்டு முதல் உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டு வருகிறது. 2011-ம் ஆண்டு அமைக்கப்பட்ட குழுவின் பதவிக்காலம் செப்டம்பர் 19-ம் தேதியுடன் (இன்று) முடிவடைகிறது. அடுத்த அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டு செப்டம்பர் 20-ம் தேதி (நாளை) முதல் செயல்பட வேண்டும்.
8 அறங்காவலர்கள்
அறங்காவலர் குழுவில் நியமனம் பெறுவதற்காக 60 பேரிடமிருந்து விண்ணப்பங்கள் வந்துள்ளதாக உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு அறக்கட்டளையின் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். இந்நிலை யில், உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜனை அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கிறோம். அவர் 20-ம் தேதி (நாளை) பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும்.
அறங்காவலர்கள் நியமனத் துக்காக ஏற்கெனவே வந்துள்ள 60 விண்ணப்பங்களை மட்டும் அவர் பரிசீலித்து, அவற்றில் தகுதி யானவற்றை அக்டோபர் 6-ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு அந்த விண்ணப்பங்கள் நீதிமன்றத்தால் பரிசீலிக்கப்பட்டு, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த தகுதியான 8 பேர் அறங்காவ லர்களாக நியமிக்கப்படுவர். இதுதொடர்பான விசாரணை அக்டோபர் 7-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT