Published : 11 Sep 2014 11:11 AM
Last Updated : 11 Sep 2014 11:11 AM

மாநிலக் கல்லூரியில் போலீஸ் பாதுகாப்பு: மாணவர்கள் மோதலை தடுக்க புதுத்திட்டம்

மாநிலக் கல்லூரிக்குள் கடந்த திங்கள்கிழமை காலையில் மாணவர்களுக்கு இடையே நடந்த கோஷ்டி மோதலில் 2 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. பாரம் பரியமிக்க மாநிலக் கல்லூரியில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் படிக்கின்ற னர். அவர்களில் சுமார் 60 பேர் மட்டும்தான் பிரச்சினைக்குரியவர் களாக உள்ளனர். இந்த 60 பேரால் கல்லூரியின் பெயர் கெடுவதுடன், பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர். இவர்களை அடையாளம் காணும் பணியில் சென்னை மாநகர போலீஸார் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கல்லூரிக்குள் திங்கள்கிழமை நடந்த மோதல் சம்பவத்தின்போது ஒரு மாணவர் கத்தியுடன் ஓடும் காட்சியை கல்லூரியில் பணிபுரி யும் ஊழியர் ஒருவர் தனது செல் போனில் படம் பிடித்துள்ளார். அதை வைத்து அந்த மாணவரை யும், காயம் அடைந்த அகஸ்டின், அருண்குமார் ஆகியோரிடம் கேட்டு அவர்களை தாக்கிய மாணவர்களில் 2 பேரையும் போலீஸார் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் மீது கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்ய போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

மோதலில் ஈடுபடும் மாணவர்களை கல்லூரியில் இருந்து நீக்குவதற்கும் நிர்வாகத்தினருடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு இதேபோல மோதல் சம்பவம் நடந்தபோது போலீஸார் கல்லூரி வளாகத்துக்குள் நுழைந்து சோதனை நடத்தினர். இதில் மரங்களுக்கு இடையேயும், மண்ணுக்கு அடியிலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கத்தி மற்றும் சில ஆயுதங்களை கைப்பற்றினர். இதேபோல சோதனை நடத்த கல்லூரி நிர்வாகத்திடம் போலீஸார் அனுமதி கேட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x