தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

தமிழகத்தின் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
Updated on
1 min read

தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளதாவது:

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை பெய்யும். திருச்சி, கரூர், திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல், நீலகிரி, மற்றும் கோவை மாவட்டங்களில் சாரல் அல்லது மிதமான மழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in