Last Updated : 07 May, 2019 02:20 PM

 

Published : 07 May 2019 02:20 PM
Last Updated : 07 May 2019 02:20 PM

விளையாடிய போது ஆணியை விழுங்கிய சிறுவன்: கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், விளையாடிய போது ஆணியை விழுங்கிய சிறுவன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அடுத்த போடிச்சிப்பள்ளியைச் சேர்ந்த கூலித்தொழாளி வெங்கட் ராமப்பா(50). இவரது மனைவி முனியம்மா(45). இவர்களுக்கு ரூபா (23), விஸ்வநாதன் (6) என ஒரு மகள், மகன் உள்ளனர். வெங்கட் ராமப்பா தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை, 11 மணியளவில் வீட்டின் அருகே சிறுவன் விஸ்வநாதன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது, அப்பகுதியில் கிடைத்த ஆணியை எடுத்து விளையாட்டாக சிறுவன் விழுங்கினான். அப்போது, அடிவயிற்றில் ஆணி சிக்கிக் கொண்டதால் வலியால் துடித்த சிறுவனை, பெற்றோர் மீட்டு கெலமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

ஓசூர் தனியார் ஸ்கேன் சென்டரில் பரிசோதனை செய்து பார்த்த போது, சிறுவன் விஸ்வநாதனின் வயிற்றுப் பகுதியில் ஆணி சிக்கிக்கொண்டிருப்பது தெரிந்தது. இதனை அகற்றும் வகையில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிறுவனை மருத்துவர்கள் அனுப்பி வைத்தனர்.

விடுமுறை நாட்களில் குழந்தைகளை மிகுந்த கவனத்துடன் பெற்றோர் பார்த்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x