Published : 27 Sep 2014 09:55 AM
Last Updated : 27 Sep 2014 09:55 AM

வெறிச்சோடிய தலைமைச் செயலகம்

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாவதை முன்னிட்டு தலைமைச் செயலகம் நேற்று வெறிச்சோடிக் காணப்பட்டது.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில் புகார் மற்றும் கோரிக்கை அளிப்பதற்கும், அமைச்சர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் செயலாளர்களைப் பார்ப் பதற்கும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான மக்கள் வந்து குவிவது வழக்கம். இதனால் தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டை வளாகம் எப்போதும் பரபரப்பாக இருக்கும். ஆனால், நேற்று காலை முதலே கோட்டை வெறிச்சோடிக் காணப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதா மற்றும் மூத்த அமைச்சர்களான ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், பழனியப்பன் உள்ளிட்ட ஏராளமான அமைச்சர்கள் நேற்று கோட்டைக்கு வரவில்லை. சமூகநலத்துறை அமைச்சர் வளர்மதி, விளையாட்டுத்துறை அமைச்சர் சுந்தரராஜ், சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட சில அமைச்சர்கள் மட்டும் தங்களது அலுவலகங்களுக்கு வந்திருந்தனர். அவர்கள் வழக்கமான அலுவல் களில் ஈடுபட்டி ருந்தபோதிலும், அவர்களைச் சந்திக்க வரு வோரின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே இருந்தது.

ஓரு சில ஆய்வுக்கூட்டங் களைத் தவிர குறிப்பிட்டு கூறும் வகையில் எந்த அலுவல்களும் நடைபெற வில்லை. அதேநேரத்தில், கோட்டையில் உள்ள அரசு ஊழியர்கள் மத்தியில், தீர்ப்பு எப்படி வரும் என்பதே முக்கிய விவாதப் பொருளாக இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x