Published : 23 May 2019 09:42 AM
Last Updated : 23 May 2019 09:42 AM
கரூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முன்னிலையில் உள்ளார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் கடந்த 19 ஆம் தேதி முடிவடைந்தது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில், இன்று (மே 23) நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது.
இதில், கரூர் மக்களவைத் தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை விட, காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முன்னிலையில் உள்ளார்.
முதல் சுற்று நிலவரப்படி, ஜோதிமணி 11564 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். தம்பிதுரை 4,806 வாக்குகளே பெற்றுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT