Published : 29 May 2019 06:46 PM
Last Updated : 29 May 2019 06:46 PM
சென்னை கடற்கரைச் சாலையில் அதிவேக மோட்டார் சைக்கிள் பந்தயம் சென்ற 11 மோட்டார் சைக்கிள்களை போலீஸார் பறிமுதல்செய்து போக்குவரத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
நேற்றிரவு சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் ஜெயகெளரி சென்னை காமராஜர் சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது போர் நினைவுச் சின்னத்திலிருந்து கலங்கரை விளக்கம் நோக்கி இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து சீறிப்பாய்ந்துச் சென்றது.
இதைப்பார்த்த அவர் கண்ட்ரோல் ரூம் மூலம் அடுத்துள்ள பாயிண்ட் போலீஸாருக்கு எச்சரிக்கை விடுத்தார். இணை ஆணையரின் எச்சரிக்கையை அடுத்து கடற்கரை சாலை ஆல் இந்தியா ரேடியோ கலங்கரை விளக்கம் அருகே போலீஸார் சாலையின் குறுக்கே தடுப்புகள் அமைத்து சீறிவந்த மோட்டார் சைக்கிள்களை மடக்கினர்.
இதைப்பார்த்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர்கள் அங்காங்கே மோட்டார் சைக்கிளை போட்டுவிட்டு தப்ப முயன்றனர். அவர்களில் பலரை போலீஸார் மடக்கி பிடித்தனர். சிலர் மோட்டார் சைக்கிள்களை கீழே போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.
இதில் போலீஸார் 11 வாகனங்களை கைப்பற்றினர். அதிவேக மோட்டார் சைக்கிள்கள்முதல் சாதாரண மோட்டார் சைக்கிள்கள் வரை 11 பைக்குகளை பறிமுதல் செய்த போலீசார் பிடிபட்டவர்களை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்களை அடையாறு போக்குவரத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT