அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜி முன்னிலை

அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜி முன்னிலை
Updated on
1 min read

அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் செந்தில்பாலாஜி முன்னிலை வகித்து வருகிறார்.  

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல், கடந்த 19-ம் தேதி முடிவடைந்தது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், இன்று (மே 23) நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது.

அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செந்தில்பாலாஜி 21,802 வாக்குகள் பெற்றுள்ளார். அங்கே உள்ள அதிமுக வேட்பாளர் 14,174 வாக்குகள் பெற்று பின்னடைவில் உள்ளார்.

 தற்போதைய நிலவரப்படி, சுமார் 6,628 வாக்கு வித்தியாசத்தில் செந்தில்பாலாஜி முன்னிலை வகித்துள்ளார்.  

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in