Published : 06 May 2019 01:13 PM
Last Updated : 06 May 2019 01:13 PM
சீட் மட்டுமின்றி பணமும் வேண்டும் என நினைத்தவர்களே, அதிமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
விசிக சார்பில் சென்னை கோயம்பேட்டில் நடைபெற்ற சிறு வணிகர் மீட்பு மாநாட்டில் பேசிய திருமாவளவன், "விடுதலை சிறுத்தைகள் கட்சி கொள்கை புரிதலுடன் தான் தேர்தலையும் அணுகுகிறது. திமுகவுடன் விடுதலை சிறுத்தைகள் கைகோர்த்திருப்பது, வெறும் சீட்டுக்காகவும், நோட்டுக்காகவும் (பணம்) அல்ல. நோட்டுக்கு ஒருபோதும் இடம் கொடுக்காத இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். சீட் மட்டும்தான். நோட்டும் வேண்டும் என்றால் எடப்பாடி பழனிசாமியிடம் தான் செல்ல வேண்டும். அதற்காகத்தான் சிலர் அங்கு சென்றுள்ளனர்"
இவ்வாறு தொல்.திருமாவளவன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT