Published : 11 May 2019 07:16 AM
Last Updated : 11 May 2019 07:16 AM

முன்னாள் எம்பியின் மனைவி கொலையில் ஆட்டோ ஓட்டுநர், மனைவி கைது

சென்னையில் அதிமுக முன்னாள் எம்பியின் மனைவி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உடந்தையாக இருந்ததாக ஆட்டோ ஓட்டுநர் மனைவியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை பெசன்ட் நகர் 6-வது அவென்யூவில் முன்னாள் எம்பி குழந்தைவேலு குடும்பத் துடன் வசித்து வந்தார். சில ஆண்டு களுக்கு முன்பு குழந்தைவேலு காலமாகிவிட்ட நிலையில், குழந்தைவேலுவின் மனைவி ரத்தினம் (63) மட்டும் அங்கு தனியாக வசித்து வந்தார்.

லண்டனில் இருந்த குழந்தை வேலுவின் மகன் பிரவீன் கடந்த மாதம் சென்னை வந்தார். தாய் ரத்தினத்துக்கும் பிரவீனுக்கும் இடையே சொத்து தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள் ளது.

இந்நிலையில் கடந்த மாதம் 15-ம் தேதி ரத்தினம் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். மகன் பிரவீன் தலைமறைவானார். இதைத் தொடர்ந்து அவர்தான் கொலையாளி என போலீஸார் அவரைத் தேடி வந்தனர்.

இந்நிலையில் கொலைக்கு உடந்தையாக இருந்ததாக பால வாக்கம், ஜீவரத்தினம் நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சத்ய ஜோதி (36), அவரது மனைவி ராணி (34) ஆகிய 2 பேரையும் சாஸ்திரி நகர் போலீஸார் கைது செய்துள்ளனர்.

தலைமறைவாக உள்ள பிரவீனை போலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x