Published : 21 May 2019 07:12 AM
Last Updated : 21 May 2019 07:12 AM

கே.கே.நகரில் பெண்ணிடம் நகை பறித்த கொள்ளையனை விரட்டிப் பிடித்த இளைஞர்கள்

சென்னை கே.கே.நகர் ராணி அண்ணா நகர் குடியிருப்பில் வசிப்பவர் பூங்கொடி (38). கிண்டியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவர் நேற்று காலை 8.45 மணி அளவில் கே.கே.நகர் பி.டி. ராஜன் சாலை 18-வது அவென்யூ சந்திப் பில் நடந்து சென்றபோது, ஒரே பைக்கில் வந்த 2 வட மாநில இளைஞர்கள், அவரது தங்கச் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பினர். அவர் கூச்சலிட்டார்.

அலறல் சத்தம் கேட்டு அந்த வழியாக பைக்குகளில் வந்த வியாசர்பாடி மணிகண் டன் (21), கவுதம் (25), மேற்கு மாம்பலம் கோபி (27) ஆகிய 3 பேர் சுமார் 2 கி.மீ. தூரம் அவர்களை விரட்டி, நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேரில் ஒருவரைப் பிடித்தனர். அவரை அடித்து உதைத்து கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பிடிபட்ட கொள்ளையன் மத்திய பிரதே சத்தை சேர்ந்த உசேன் (29) என்பது விசார ணையில் தெரியவந்தது. அவரை போலீ ஸார் கைது செய்தனர். கொள்ளையனை விரட்டிப் பிடித்த இளைஞர்களுக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x