Published : 04 May 2019 03:11 PM
Last Updated : 04 May 2019 03:11 PM
நான் காங்கிரஸில் இணைந்து காணாமல் போய் விடவில்லை. தர்மயுத்தம் செய்து காணாமல் போனவர் ஓபிஎஸ்தான் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, "முதல்வருக்கும் துணை முதல்வருக்கும் கொள்கை என்பதே கிடையாது. மோடியின் பாதுகாப்பிலும், கட்டுப்பாட்டிலும் அவர்கள் இருக்கிறார்கள்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சூலூரில் பேசுகிறபோது, 'இந்த அழகிரி எங்கிருந்து வந்தார், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி காணாமல் போய் விட்டது' என பேசியதாக எனக்கு சொன்னார்கள்.
துணை முதல்வர் ஓபிஎஸ் அவரது ஊரில் கிளைச் செயலாளராக இருந்தபோது, நான் தமிழகத்தில் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தேன். நான் காங்கிரஸில் இணைந்து காணாமல் போய் விடவில்லை. தர்மயுத்தம் செய்து காணாமல் போனவர் அவர் தான்" என, கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT