Published : 29 Apr 2019 11:56 AM
Last Updated : 29 Apr 2019 11:56 AM
நான்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு தெரிவித்துள்ளது.
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் மே 19 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், அதிமுக சார்பாக, சூலூரில் வி.பி.கந்தசாமி, அரவக்குறிச்சியில் வி.வி.செந்தில்நாதன், திருப்பரங்குன்றம் தொகுதியில் எஸ். முனியாண்டி, ஓட்டப்பிடாரம் தொகுதியில் பெ.மோகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், நான்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று (திங்கள்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற நான்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுகின்ற அதிமுக வேட்பாளர்களுக்கு தேமுதிக முழு ஆதரவை அளிக்கிறது.
சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகளிலும் தேமுதிக நிர்வாகிகளும், தொண்டர்களும் முழு ஆதரவு தந்து பணியாற்றி, சட்டப்பேரவை இடைத்தேர்தல் வேட்பாளர்களின் வெற்றிக்கு கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் அயராது பாடுபட வேண்டும்" என விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT