Published : 29 Sep 2014 09:50 AM
Last Updated : 29 Sep 2014 09:50 AM

தமிழக மீனவர்கள் 4 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை

தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையினரால் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிறைபிடிக்கப்பட்டனர்.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்தி லிருந்து சனிக்கிழமை 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இதில் ரத்தினசாமி என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற முனியசாமி, கோபு, ஸ்டிபன், சங்கர் ஆகிய 4 பேர் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது விசைப்படகு பழுதடைந்தது.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அப்பகுதியில் ரோந்துவந்த இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்கள் 4 பேரையும் சிறைபிடித்தனர். பின்னர் மீனவர்கள் ஊர்காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை இலங்கை நீதிமன்றத்துக்கு விடுமுறை நாள் என்பதால் மீனவர்கள் 4 பேரும் திங்கள் கிழமை ஆஜர்படுத்தப்பட்டு சிறையி லடைக்கப்படுவர் என எதிர்பார்க் கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x