Published : 03 Apr 2019 11:43 AM
Last Updated : 03 Apr 2019 11:43 AM

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை: 2 நாட்கள் ஆய்வு செய்கிறார்

தமிழகத்தில் தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதி நிதிகளுடன், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று ஆலோசனை நடத்துகிறார்.

மக்களவைத் தேர்தலின் 2-ம் கட்டமாக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 18-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. இதனுடன் சேர்த்து, காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலும் நடத்தப்படுகிறது.

தேர்தலை முன்னிட்டு, தேவை யான முன்னேற்பாடுகளை தமிழக தேர்தல் துறை செய்து வருகிறது. வழக்கமாக, தேர்தல் நடவடிக்கை தொடங்கியதும், இந்திய தலை மைத் தேர்தல் ஆணையர் தலைமை யிலான ஆணையக் குழுவினர் மாநிலங்களுக்குச் சென்று ஆய்வு செய்வது வழக்கம்.

அந்த வகையில், தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகளை ஆய்வு செய்ய இந்திய தலைமைத் தேர் தல் ஆணையர் சுனில் அரோரா தலைமை யில் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷில் சந்திரா மற்றும் ஆணையரக உயர் அதிகாரிகள் நேற்றிரவு சென்னை வந்தனர்.

9 நிமிடங்கள்

தொடர்ந்து, அவர்கள் இன்று காலை 10 மணிக்கு கிண்டியில் உள்ள ஐடிசி ஓட்டலில் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோ சனை நடத்துகின்றனர். இதில், பாஜக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 7 தேசிய கட்சிகள், அதிமுக, திமுக, தேமுதிக ஆகிய 3 மாநில கட்சிகளின் பிரதிதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

தனித்தனியாக கட்சிகளின் பிரநிதி களை ஆணையர்கள் சந்தித்து ஆலோசனை நடத்து கின்றனர். ஒவ்வொரு கட்சிக்கும் 9 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, காலை 11.30 மணி முதல் இரவு 7 மணிவரை, 32 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், எஸ்பிக்கள் மற்றும் காவல் ஆணையர்கள் பங்கேற் கும் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இக்கூட்டத்தில் மாவட்டங்கள்தோறும் நடந்துவரும் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணை யர் ஆய்வு செய்கிறார்.

வருமான வரித்துறை

மேலும், ஏப்ரல் 4-ம் தேதி (நாளை) காலை 10 மணிக்கு வருமானவரித் துறை, சுங்கத்துறை மற்றும் இதர மத்திய துறைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதன் பின் தமிழக தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், டிஜிபி மற் றும் தேர்தல் சார்ந்த இதர துறை உயர் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்துகிறார். அதன்பின் பிற்பகல் 1 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்தித்து தேர்தல் நடவடிக்கைகள் குறித்து விளக்குகிறார்.

இதுதொடர்பாக தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறும்போது, ‘‘முழு ஆணையமும் தமிழகம் வருகிறது. தமிழகத்தில் தேர் தல் ஏற்பாடுகள் குறித்தும், கண் காணிப்புப் பணி களை மேற்கொண்டு வரும் வருமானவரித் துறை, சுங்கத் துறை அதிகாரிகளுடனும் ஆய்வு செய் கின்றனர். இந்த ஆய்வின்போது தேர்தல் தொடர்பான அனைத்து விவகாரங்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்’’ என்றார்.

ஆலோசனை நடக்கவுள்ள கிண்டி ஐடிசி ஓட்டல் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x