Published : 20 Sep 2014 10:37 AM
Last Updated : 20 Sep 2014 10:37 AM
பிரான்சின் சுற்றுச் சூழல் நிறுவனமான லோடலியர் ஐகாஸ் முதல்முறையாக தண்ணீர் சுத்திகரிப்பில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளது. சுற்றுச் சூழல் பணிகளில் 112 ஆண்டு அனுபவம் உடைய இந்நிறுவனம் தண்ணீர் சுத்திகரிப்பு மற்றும் கட்டமைப்புப் பணிகளில் ஈடுபட உள்ளது. லோடலியர் ஐகாஸ் நிறுவனம் தண்ணீர் சுத்திகரிப்பிலும் மெய்ஹெம் இன்ஜினீயர்ஸ் கட்டமைப்புப் பணிகளிலும் ஈடுபட உள்ளது.
தண்ணீர் மறு சுழற்சி சுத்திகரிப்பு, கழிவுநீர் நிர்வாகம் மற்றும் சுத்திகரிப்பு ஆகிய பணிகளை இந்நிறுவனம் மேற்கொள்ள உள்ளதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி வி.எஸ். பிள்ளை தெரிவித்தார். அடுத்த 2 ஆண்டுகளில் இந்தியாவில் பல்வேறு முக்கிய கட்டுமான பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அவர் கூறினார். பெருநகர குடிநீர் விநியோகத் திட்டம், கால்வாய் திட்டம், ஏரிகள் சீரமைப்பு, அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் திட்டம், மழைநீர் கால்வாய் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT