Published : 02 Sep 2014 12:00 AM
Last Updated : 02 Sep 2014 12:00 AM

விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கு: அக்டோபர் 16-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

திருவண்ணாமலையில் 28.8.12 அன்று நடந்த பொதுக்கூட்டத்தில், முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி அவதூறாக பேசியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தி.மலை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை, திங்கள்கிழமை நடந்தது. வழக்கு விசாரணையில் ஆஜராவதில் இருந்து விலக்களித்து, சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவு காரணமாக விஜயகாந்த் ஆஜராகவில்லை.

வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிபதி ராகவன், அடுத்தக்கட்ட விசாரணையை அக்டோபர் 16-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். இதுகுறித்து விஜயகாந்த் சார்பில் ஆஜரான தேமுதிக வழக்கறிஞர் காளிங்கன் கூறும்போது, “அவதூறு வழக்கு விசாரணையில் விஜயகாந்த் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி தி.மலை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். அந்த மனு மீது பதிலளிக்க அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது” என்றார். அரசு தரப்பில் வழக்கறிஞர் அன்பழகன் ஆஜரானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x